பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்2 படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து இவர் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்ளும் அனன்யா, இஷான் கட்டருடன் காதலில் உள்ளதாக பேசப்பட்டது. இப்போது இவர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி நடிகர் என அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.
இதனிடையில் அனன்யா பாண்டே போதைப் பொருள் வழக்கில் சிக்கி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் அவருடன் போதைப்பொருள் பற்றிய உரையாடலில் ஈடுப்பட்டதாக கூறி அனன்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி உடையில் வலம் வந்து ரசிகர்களை கவரும் அனன்யாபாண்டே, இப்போது பிகினியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
