Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்…. நாடக இயக்குனருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நாடக இயக்குனர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் பகுதியில் அசோகன்(63) என்பவர் வசித்து வந்துள்ளார். நாடக இயக்குனரான இவர் கடந்த 1ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கபிலர் மலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தண்ணீர் பன்னல் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த அசோகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஜோடர்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து அசோகன் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Categories

Tech |