Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படுத்திருந்த 3 வயது குழந்தை…. ருத்திராட்ச கொட்டையால் வந்த விளைவு…. நாமக்கல்லில் அரங்கேறிய சோகம்….!!

தொட்டிலில் படுத்திருந்த 3 வயது குழந்தை ருத்திராட்ச கொட்டையின் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் வசித்து வரும் கோபி என்பவருக்கு பிரியா என்ற மனைவியும், 3½ வயதில் முகுல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் குழந்தையை கோபியின் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றனர். இதனையடுத்து குழந்தையை தொட்டிலில் படுத்திருந்த சமயத்தில் முகுல் கழுத்தில் கட்டபட்டிருந்த ருத்திராட்ச கொட்டையின் கயிறு  கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து கயிறு இறுக்கி முகுல் மயக்கமடைந்த நிலையில், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கோபியின் தந்தை சாமிக்கண்ணு உடனடியாக குழந்தையை நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முகுல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |