தமிழகத்தில் 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்வது ஒழுங்கு கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு,மேலும் அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்வதால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories
BREAKING: அரசு ஊழியர்களே…. 2-வது திருமணம் செய்யக்கூடாது…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!
