தமிழ்நாட்டை ஆளக்கூடிய “ஆண் தாய்” முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்றதாக இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் படங்களை பார்த்து நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக உள்ள தமிழகத்தை ஆளும் “ஆண் தாய்” முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் “மாமனிதன்”, “இடிமுழக்கம்” ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும், அதே நேரம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக ஸ்டாலின் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைளுக்கும் நன்றி கூறி ஜான் ரீடு எழுதிய “உலகை குலுக்கிய பத்து நாட்கள்” நூலினை அவருக்கு தந்தேன். அப்போது ஸ்டாலின் அவர்கள் அவர்தம் வரலாற்று நூலின் முதல்பாகமான “உங்களில் ஒருவன்” நூலில் கையொப்பமிட்டு பரிசாக தந்தார். மேலும் “மக்கள் அன்பன்” என் கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனிருந்து வாழ்த்தினார்” என்று தெரிவித்துள்ளார்.
Categories
தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இயக்குனர்….. வெளியான புகைப்படம்……!!!!!
