Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சைக்கிள்-வேன் மோதல்…. பறிபோன தொழிலாளியின் உயிர்…. நாமக்கல்லில் பயங்கர விபத்து….!!

சைக்கிள் மீது வேன் ஒன்று பயங்கராமாக மோதி விபத்திற்குள்ளானதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கல்லாங்குத்து பகுதியில் வசித்து வந்த ரங்கசாமி(55) என்பவர் விவசாய கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தண்ணீர்பந்தல் காரு அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த வேன் திடீரென கட்டுபாட்டை இழந்து சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த ரங்கசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ரங்கராமியின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |