Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரானார் 10 ஆம் வகுப்பு மாணவி..!!

மேலும் தலைமை ஆசிரியர் பணி குறித்து மாணவிக்கு, விநாயக மூர்த்தி தெளிவாக விளக்கினார். அதன்பின் பள்ளி ஆசிரியர்களுடன் காவ்யா சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, மாணவ-மாணவியர்களிடம் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பள்ளி மாணவி தலைமை ஆசிரியராக செயல்பட்டது எப்படி? என்பது குறித்து ஆச்சிரியர்களிடம் கேட்டபோது, நேற்று பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மாணவி ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார் என்றனர்.

அந்த வாய்ப்பு 10-ஆம் வகுப்பு மாணவி காவ்யாவுக்கு கிடைத்துள்ளது. மாணவி காவ்யா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், அவரின் வருகை பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் அவர் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செய்தல் என அனைத்திலும் சிறந்து விளங்கியதால் காவ்யாவை ஒரு நாள் தலைமை ஆசிரியையாக தேர்வு செய்தோம் என ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Categories

Tech |