கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தீவிரமாக பரவி அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவிலிருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வேகமெடுத்து பரவிய தொடங்கியது. எனவே நாடு முழுவதும் 15 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கொரோனா 4வது அலை ஜூன் மாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.