Categories
உலக செய்திகள்

துருக்கியில் கடும் நிலநடுக்கம்… 18 பேர் மரணம்.. 500க்கும் மேற்பட்டோர் காயம்.!!

நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் மற்றும் மலாத்யா ஆகிய இரண்டு மாகாணங்களில் ஏராளமான வீடுகள், கடைகள், உட்பட அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. குறிப்பாக வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். இதையடுத்து உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Image result for An earthquake in Turkey caused the collapse of buildings, killing 18 people.
இந்த இரண்டு மாகாணங்களில் நிலநடுக்க பாதிப்பினால், மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் வேகமாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. சிலர் இன்னும் கட்டிட இடிபாடுகளில்  சிக்கி தவிப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |