Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு…? பிரதமர் எடுக்கும் திடீர் முடிவு…!!!!!!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா தொற்று பரவியது. இந்தத் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து  போன்ற  ஒருசில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருக்கிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, வரக்கூடிய  குளிர் காலத்தில், நாட்டில் 1 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது.

மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவை, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
மேலும் குளிர்காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் நிலைமக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி நெதர்லாந்து நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அங்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் வரை குளிர் காலம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |