Categories
மாநில செய்திகள்

திடீர் விசிட் அடித்த மேயர்… அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்தில்  திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய முக்கிய பேருந்துநிலையமாக  அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம்  இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள்,வணிகம் மேற்கொள்வர்.

இதையடுத்து இந்த பேருந்து நிலையத்திற்கு, ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா திடீரென ஆய்வு மேற்க்கொள்ள வருகை புரிந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் இலவசமாக வழங்கப்படும் குடிநீர், இருக்கைகள், அமருமிடம், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகள் என்னவென்று  கேட்டறிந்தார்.

அதன்பிறகு, பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் உணவு மற்றும்  சிற்றுண்டிகளின் தரம் குறித்தும் கேட்டறிந்துள்ளார். மேலும் பேருந்து நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை காட்டிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து ஓசூர் மாநகரில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகளையும்  மீட்கவிருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |