Categories
தேசிய செய்திகள்

இவங்கள அப்பாவிகள் என்று கூற முடியுமா…? எடியூரப்பா கேள்வி….!!!!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக கலவரத்தை ஊக்குவிப்பதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உப்பள்ளியில் கலவரம் நடந்திருக்கிறது. அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி வாகனங்களை சேதப்படுத்தியிருக்கின்றனர்.

இதில் 12 போலீசார் காயமடைந்திருக்கின்றனர். இத்தகையவர்களை அப்பாவிகள் என கூறமுடியுமா? ஆனால் தவறு செய்தவர்கள் போலீசார் கைது செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அப்பாவிகளை கைது செய்யக் கூடாது என கூறுகின்றனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. மேலும் பெங்களூருவில் இருந்து கொண்டு பேசுவது சரியானது அல்ல. அவர்கள் உப்பள்ளிக்கு வந்து சம்பவம் நடந்த பகுதிகளை  காண வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |