Categories
அரசியல் மாநில செய்திகள்

மிரட்டலாம்னு நினைக்காதீங்க….! DMK கணக்கில் தான் இருக்கீங்க …!! Velmurugan vs சபாநாயகர் Appavu வாக்குவாதம்..!!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தென் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளை வாழ வைக்கின்ற முல்லை பெரியார் அணையில்  வல்லுநர் குழு 152 அடியாக நீரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

ஆதலால் 152 அடி உயர்த்துவதற்கும்,  நீரை தேக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை நம்முடைய முதலமைச்சர் அவர்களும்,  நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு… தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளை, வனத்துறையினரை, காவல்துறையினரை கேரள எல்லையில் தடுத்து தாக்குவதும், அடித்து உதைப்பதும், சித்திரவதை செய்வதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்களும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அவர்களும், கேரள முதலமைச்சர், நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்திக்கின்ற போது வலியுறுத்தவேண்டும். கடந்த காலங்களில் பொள்ளாச்சி செக்போஸ்ட் எல்லையில் வனத்துறையினர் தாக்கப்பட்டார்கள் என்று அதை விசாரிக்க காவல்துறை செல்கிறது. காவல்துறையும் அங்கேயே தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

தொடர்ச்சியாக இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் அதை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் செய்ய போன எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பாக இந்த அவையின் கவனத்தை ஈர்த்து  மதிக்கின்றேன் என தெரிவித்தார்.

இதனை பேச சபாநாயகர் அப்பாவுக்கும், வேல்முருகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பாவு வேல்முருகனை போதும்… சீக்கிரம் முடியுங்கள் என்று சொல்ல, வேல்முருகன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டு, இறுதியாக பேசி முடித்தார். இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எல்லாருமே மிரட்டலாம்,  உருட்டலாம் என்பதை மட்டும் தயவு செய்து மனதில் வெச்சுக்காதீங்க. நான் பொதுவாக சொல்கின்றேன்.

உங்களை யாரும் சொல்லவில்லை. தம்பி வேல்முருகன் சொல்லும்போது எழும்பி பேசினார்கள். நீங்க  திமுக அந்தக் கணக்கில்தான் தம்பி இருக்கீங்க. கட்சிக்கு ஒரு ஆள் தான் பேசணும். கம்பம் ராமகிருஷ்ணன் பேசியாச்சு. அதற்கு பிறகு அந்த வாய்ப்பு உங்களுக்கு தந்திருக்கிறேன். தந்தால் 2 நிமிடத்தில் முடிக்க வேண்டும்.

எல்லோருக்கும் உரிமை இருக்கு. அவுங்களுக்கு கொடுத்த மாதிரி எனக்கு தாங்க என்று எல்லோரும் கேட்க இந்த அவையில் உரிமை இருக்கின்றது. எல்லோரையும் அரவணைத்து போகணும். அது தான் முதல்வரின் எண்ணம். அந்த அடிப்படையில்தான் சபையில் யாருக்கு மறுப்பு சொல்லாமல் இருக்கின்றோம். அதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டு கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |