Categories
உலக செய்திகள்

பதவியை ராஜினாமா செய்த ஏமன் அதிபர்…. காரணம் இதுதான்?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு அரசு படைகளுக்கும் இடையே 7 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கிடையே சவுதி அரேபியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஏமன் நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி கடந்த 7ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனை தொடர்ந்து 8 அரசியல் தலைவர்களை கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி கவுன்சிலுக்கு தன்னுடைய அதிகாரத்தை மன்சூர் ஹாதி ஒப்படைத்தார். இந்த நிலையில் மன்சூர் ஹாதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததற்கு சவுதி அரேபியா அரசு கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தற்போது மன்சூர் ஹாதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மன்சூர் ஹாதியின் ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை வெளியிடுவதாக மிரட்டி சவுதி அரேபியா அதிகாரிகள் அவரை பதவி விலக செய்ததாக கூறப்படுகிறது. ரியாத்தில் உள்ள அவரது வீட்டில் மன்சூர் ஹாதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Categories

Tech |