ஜம்மு, காஷ்மீரின் குப்வாராமாவட்டத்தில் காவல்துறையினரும், பாதுகாப்புபடையினரும் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இவற்றில் தட் கர்ணா பகுதியில் ஹஜம் மொகல்லா எனும் இடத்தில் அதிகளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புபடையினர் கைப்பற்றினர்.
அதில் 10 பிஸ்டல்கள், 17 மேகசின்கள் (தோட்டாக்களை வைக்கும் உபகரணம்), 54 தோட்டாக்கள் மற்றும் 5 எறிகுண்டுகள் போன்றவை இருந்தது. இவற்றையெல்லாம் பயங்கரவாதிகள் யாரேனும் விட்டு சென்றார்களா..? அல்லது சதி வேலைக்கு பயன்படுத்த கொண்டு வரப்பட்டவையா..? என தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.