இம்ரான் கான் தான் பிரதமராக இருந்த போது குறைந்த விலையை கொடுத்தோ கொடுக்காமலோ ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்ரான் கான் உலகத் தலைவர்களிடம் இருந்து பாகிஸ்தான் அரசியல் பிரதமராக இருந்த போது தனது 3.5 ஆண்டுக் காலத்தில் ₹ 140 மில்லியனுக்கும் அதிகமான 58 பரிசுகளைப் பெற்றுள்ளார். இதனை எல்லாவற்றையும் மிகக் குறைந்த தொகையைச் கொடுத்தோ அல்லது எதுவும் கொடுகாமலோ அவரே வைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பரிசுப் பொருட்களின் விபரம், ஒரு ஜோடி கஃப்லிங்க்ஸ் மற்றும்காதணிகள், நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம், ஐபோன், பேனா, கிராஃப் கைக்கடிகாரம், ரோலக்ஸ் கைக்கடிகாரம்.
இதில் ₹ 23.5 மில்லியன் மதிப்பிலான ஒரு ரோலக்ஸ் வாட்ச், ஜோடி கஃப்லிங்க்ஸ், மோதிரம் மற்றும் நெக்லஸ், பிரேஸ்லெட் மற்றும் காதணிகளை 11.5 மில்லியன் மட்டுமே செலுத்தித் தன்வசப்படுத்தி உள்ளார். சுமார் ₹ 754,000 செலுத்தி ₹ 3.8 மில்லியன் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரம், ₹ 294,000 செலுத்தி ₹ 1.5 மில்லியன் மதிப்புடைய மற்றொரு ரோலக்ஸ் கடிகாரம் மற்றும் ரோலக்ஸ் வாட்ச்கள், ஐபோன் மற்றும் ₹ 1.73 மில்லியன் மதிப்புள்ள மற்ற பொருட்களை அவர் ₹ 338,600க்கு தக்க வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2018ல் அவர் பிரதமராகப் பதவி ஏற்ற சமயத்தில் ₹ 5.67 மில்லியன் கஃப்லிங்க், ₹ 85 மில்லியன் மதிப்புள்ள கிராஃப் வாட்ச், ₹ 8.75 மில்லியன் மோதிரம், ₹ 1.5 மில்லியன் பேனா என மொத்தம் ₹ 100 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளை வெறும் 20% தொகையைச் செலுத்தி தக்க வைத்துக் கொண்டார்.
மேலும் அவர் மொத்தம் ₹ 8,00,200 மதிப்புள்ள பரிசுகளை எந்தப் பணமும் கொடுக்காமல் வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல, ₹ 140 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளை அவர் ₹ 38 மில்லியன் டாலர் செலுத்திப் பெற்றுக் கொண்டார். அவற்றில் மிகவும் விலையுயர்ந்த பரிசுகள் துபாயில் விற்கப்பட்டதாகப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டி உள்ளார். இதில் இம்ரான் கான் ஆட்சியில் அரசின் கடன் சுமையைக் குறைக்கப் பல சிக்கன நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டன. இருப்பினும் அவரே இப்போது ₹ 140 மில்லியன் மதிப்பிலான பரிசுகளை வைத்துக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.