Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு…. மாநில போட்டிக்கு தேர்வு….!!

தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதல்கள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, கருவியிசை, ஓவியம் போன்ற போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சேர்ந்தவர்கள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அதன் அடிப்படையில் பரதநாட்டியத்தில் சினேகா என்பவரும், குரலிசை போட்டியில் சுவாதி என்பவரும், காளியட்டத்தில் செல்வனும், கிராமிய நடன போட்டியில் பார்த்தீபனும், கருவியிசை போட்டியில் ஆகாசும், ஓவிய போட்டியில் பிராகசும் முதலிடம் பிடித்து மாநில அளவு போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் ஹேமநாதன், மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் உள்பட பலரும் உடனிருந்தனர்.

Categories

Tech |