Categories
உலக செய்திகள்

மீண்டும் அமலாகும் ஊரடங்கு?…. பிரபல நாட்டில் நிலவும் பதற்றம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கை நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அந்நாட்டின் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் அதிபர் மாளிகை முற்றுகை போராட்டமும் தீவிரமடைந்து வருவதால் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் மாளிகை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அரசு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அரசு தரப்பில், நாடு முழுவதும் 7 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |