Categories
மாநில செய்திகள்

63 வயது நபருக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ இடஒதுக்கீடு?…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 % இடஒதுக்கீட்டின் கீழ் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு மருத்துவப்படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்ளும்படி மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சென்னையைச் சோ்ந்த முனுசாமி என்ற 63 வயதுள்ள அரசுப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் நீட் தோ்வில் 348 மதிப்பெண்கள் பெற்ற தனக்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கை வழங்கக் கோரி விண்ணப்பித்து இருந்தாா். ஆனால் 6-12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைப் பூா்த்தி செய்யாததால் அவரது கோரிக்கையை மாணவா் சோ்க்கை தோ்வுக்குழு நிராகரித்துவிட்டது. இதனை எதிா்த்து முனுசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த், கடந்த 1977-ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படிப்பை நிறைவுசெய்த மனுதாரா், மொத்தமாக 11 வருடங்கள் அரசுப் பள்ளியில் படித்து இருக்கிறாா். அந்த காலகட்டத்தில் 12ஆம் வகுப்புக்கு இணையான படிப்பு இல்லை என்பதால், அவருக்கு மருத்துவ மாணவா் சோ்க்கை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டு விளக்கம் அளிக்கும்படி மருத்துவக்கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |