Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஐயோ என் மகளை காணும்” பெண்ணிற்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்…. உறவினர்களின் போராட்டம்….!!!

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில்   சாப்பிடுவதற்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த  அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர் .  இந்நிலையில்  அதே பகுதியில் அமைந்துள்ள முந்திரி காட்டில் சுகன்யா இறந்து கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சுகன்யாவை சிலர் கற்பழித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யாவின் உறவினர்கள் சுகன்யாவை  கொலை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட சுகன்யாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்ய   நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை  தொடர்ந்து சுகன்யாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Categories

Tech |