வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாத்தூர் கிராமத்தில் எலக்ட்ரீசியனான யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 3 1/2 லட்ச ரூபாயை இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் தனது வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.