கடந்த 2018 ஆம் ஆண்டு கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் தற்போது கே.ஜி.எப். இரண்டாம் பாகம் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, வசூலிலும் அதிரடி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கே.ஜி.எப் இரண்டாம் பாகம் வெளியான 2 நாட்களில் இந்தியா முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்தியில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளது.