Categories
தேசிய செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்…. சோற்றில் உப்பு அதிகமானதால் கொடூரம்…. பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நிலீஸ் ஹஜ் , நிர்மலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நிர்மலா தனது கணவருக்கு சோறு மற்றும் காய்கறி கூட்டு அடங்கிய உணவை பரிமாறி உள்ளார். அந்த உணவில் உப்பு சற்று அதிகமாக இருந்துள்ளது. உணவில் உப்பை அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன், மனைவி நிர்மலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். அதனால் மூச்சுவிட முடியாமல் நிர்மலா துடிதுடித்து உயிரிழந்தார். அதன் பிறகு வீட்டை விட்டு நிலீஷ் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் உடனே போலீசில் தகவல் அளித்தனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி மனைவியை கொன்றுவிட்டு தப்பி ஓடிய கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சோற்றில் உப்பு சற்று அதிகமாக இருந்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |