Categories
மாநில செய்திகள்

கடந்த 2 வருடங்களாக சரியாக வழங்கப்படாத…. மகப்பேறு உதவித்தொகை…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக நிலுவையில் உள்ள மகப்பேறு உதவி தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. அதில் சென்னை முதல் இடத்திலும் கோவை இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

இதனைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த வருடம் குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இதுவரை 25 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடங்கள் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் முக கவசம் அணிவது அவசியம்

. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை சரிவர வழங்கப்படவில்லை. எனவே ஒரு குழு அமைத்து விடுபட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் வழங்கப்படாத மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |