9 ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் உள்பட 3 மாவட்டங்ககளில் 9 ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ரயில் நிலையம் அலுவலகம் முன்பாக பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி உள்ளார்.
அதன்பின் மாவட்டச் செயலாளர்கள் மகேஷ், கார்த்திகேயன், ரவிச்சந்திரன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் புத்தாண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இதில் பலர் கலந்து கொண்டுள்ளனர்.