Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்….. கோர விபத்தில் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் முனியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் பெத்தாசமுத்திரம் பகுதிக்கு மாட்டு தீவனம் வாங்குவதற்காக சென்றுள்ளார். இவர் வீ கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் முனியனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனியனும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பழனியம்மாள் மற்றும் பழனிச்சாமி ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முனியன் மற்றும் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |