பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒரு ஜெர்மன் நாட்டு தானியங்கி மோட்டார் சைக்கிள் மற்றும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அது அதன் செயற்பாட்டிற்கும் சொகுசு வாகனங்களுக்கும் அறியப்பட்டது. அது MINI என்ற வர்த்தகப் பெயர் கொண்டவற்றை சொந்தமாக வைத்துள்ளது மற்றும் உற்பத்தி செய்கிறது, மேலும் அது ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்களின் தாய் நிறுவனமாகும். இந்நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனம் தன்னுடைய 2022 எப் 900 எக்ஸ்ஆர் ப்ரோ மோட்டார் சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.12.30 லட்சம். இதன் இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இதன் விநியோகத்தை ஜூன் மாதம் தொடங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா மூலம் பிரத்தியேக சலுகைகள் வழங்கப்படுகின்றன.