கோவிலுக்கு சென்று விட்டு தாமதமாக திரும்பிய வாகனங்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வனப்பகுதியில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு 6 வாகனங்கள் பாபநாசம் சோதனை சாவடிக்கு வந்தது. இதனால் தாமதமாக வந்த வாகனங்களுக்கு வனத்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.