Categories
அரசியல் மாநில செய்திகள்

இலங்கை விவகாரம்…. வெளியுறவுத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மார்ச் 31ஆம் தேதி பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்து இருந்தேன். தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்து தர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |