Categories
தேசிய செய்திகள்

டீ கொடுக்காததால்…. மருமகளை மாமனார் செய்த காரியம்…. வெளியான பயங்கர சம்பவம்….!!!!

மாமனாரால் மருமகளுக்கு நேர்ந்த அவலம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தை அடுத்த ரபோடி என்ற பகுதியில் ரபோடியைச் சேர்ந்த காசிநாத் பாண்டுரங் பாட்டீல் என்ற 76 வயது முதியவரின் தனக்கு கொடுக்கப்பட்ட காலை உணவுடன் தேநீர் கொடுக்கவில்லை எனக் கூறி 42 வயதான மருமகள் ஒருவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இதனால் வயிற்றில் குண்டடிப்பட்ட அந்த பெண்ணை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். இதனையடுத்து காசிநாத் மீது அவரது மற்றொரு மருமகள் போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து காசிநாத் மீது 307, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, மருமகளை துப்பாக்கியால் சுட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |