ஊராட்சி மன்ற தலைவரை போல் கையொப்பமிட்டு பண மோசடியில் ஈடுபட்ட செயலாளரை பணியிட நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொத்தப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி வழங்குவதில் முறைகேடு தொடர்ந்து நடப்பதாக ஆட்சியர் முரளிதரனுக்கு புகார்கள் வந்தனர். அதன் அடிப்படையில் ஆட்சியர் நேரடியாக நடத்திய விசாரணையில் ஊராட்சி மன்ற செயலாளர் ஞானசேகரன் என்பவர் முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது.
இவர் கட்டிட அனுமதிக்காக வசூலிக்கப்படும் பண ரசீதில் ஊராட்சி மன்ற தலைவருக்கு பதிலாக இவரே போலியாக கையொப்பமிட்டு மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி செயலாளர் ஞானசேகரனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் முரளிரதன் உத்தரவிட்டுள்ளார்.