அரசு விதிமுறையின்படி இயங்காத எடை மேடைக்கு ஆர்.டி.ஓ உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி – புதுக்கோட்டை ரோட்டில் ஒத்தக்கடையில் தனியாருக்கு சொந்தமான கனரக வாகன எடைமேடை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து, வாகன நெரிசல் ஏற்படுவதாக அறந்தாங்கி வருவாய் துறையினருக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் எடைமேடை உரிமையாளரிடம் அரசு விதிமுறைப்படி எடைமேடை இயங்க வேண்டும்.
மேலும் எடை மேடை பகுதியில் வாகன நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு பணியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எடை மேடை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து உள்ள நிலையில் ஆர்.டி.ஓ உத்தரவின்படி அறந்தாங்கி வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த எடைமேடையை சீல் வைத்துள்ளனர்.