Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் …. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

பிரதோஷத்தை முன்னிட்டு  அபிமுக்தீஸ்வரர்  கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற  அபிமுக்தீஸ்வரர் சாமி  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் அபிதகுஜலாம்பாள் சமேத அபிமுக்தீஸ்வரர்  மற்றும்  நந்திகேஸ்வரருக்கு  பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான  பக்தர்கள்  கலந்து கொண்டு சாமியை  தரிசனம் செய்தனர்.

Categories

Tech |