சரக்கு வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்துபுரத்தில் சுப்புராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான அசோகன் என்பவருடன் ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் நண்பர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரக்கு வாகன ஓட்டுநரான கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.