சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்பட்டது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் முதல்வரிடம் உறுதி அளித்த பிறகும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.