Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை” கூலி தொழிலாளியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சனையில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வீரபாண்டி வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீரபாண்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |