Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீனவர்கள் வங்கி சேவைகளை எளிமையாக பெற விவசாய கூட்டுறவு வங்கிகள் செயல்படுவதை போல் மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மீன் பதனிடுதல் மற்றும் ஏற்றுமதிக்கு தேவையான கட்டமைப்புகளை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தூத்துக்குடி மாவட்டத்தில் 83 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள், கடல் அரிப்பு தடுப்பு மற்றும் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். நெல்லையில் 5 கோடி மதிப்பீட்டில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |