Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தண்ணீர் என நினைத்தேன்” போதையில் வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீர் என நினைத்து மதுவில் விஷம் கலந்து குடித்த நபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் ஜீவநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜீவநாதன் போதையில் தண்ணீருக்கு பதிலாக மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனை அடுத்து மயங்கி கிடந்த ஜீவநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜீவநாதன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |