Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தேங்காய் பறித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் லாரி ஓட்டுநரான சின்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து சின்னராஜ் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சின்னராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |