Categories
உலக செய்திகள்

சீனா: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. வெளியான அறிவிப்பு…..!!!!

சீன நாட்டில் சென்ற சில மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக ஷாங்காய்நகரில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடும் ஊரடங்கு 3 வாரங்கள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே ஷாங்காய்நகரில் கொரோனா தாக்கம் காரணமாக கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கவேண்டிய நிலை இருக்கிறது.
ஷாங்காய் நகரில் ஊரடங்கு காரணமாக அங்கு இயங்கி வரும் இந்திய துணைத் தூதரகம், தற்காலிகமாக தன் சேவைகளை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறது. அங்கு தூதரக சேவைகளை நேரடியாக வழங்கும் சூழ்நிலையில் இல்லை என்று சீனதலைநகர் பீஜிங்கில் இயங்கி வரும் இந்திய தூதரகம் அறிக்கை வாயிலாக தகவல் தெரிவித்துள்ளது. பணியாளர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே முக்கியமான அலுவலக பணிகளை மேற்கொள்வர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியர்கள் தூதரகத்திற்கு நேரடியாக சென்று சேவைகளை பெற இயலாது. ஷாங்காய் நகரின் நிலவரத்தின் காரணமாக கிழக்குசீன பிராந்தியத்திலுள்ள இந்திய குடிமக்கள் அவசர தூதரக சேவைகளைப் பெற பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏதேனும் அவசர சேவைகளை பெற (+86 189 3031 4575/ 183 1716 0736) என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |