மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவரும், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரும் ஒரே மாணவியை காதலித்து வந்துள்ளனர். இதனால் மாணவியை காதலிப்பதில் 2 மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் வைத்து திடீரென மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து சங்கராபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மாணவர்களை கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.