Categories
கோவில்கள் தேசிய செய்திகள்

ராமர் பாலம்… வரலாற்று சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கு….மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

இந்தியா, இலங்கை  இடையே அமைந்துள்ள ராமர் பாலம்,  பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பாக, நிலைப்பாட்டை தெளிவு படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த பகுதியில் சேது சமுத்திர கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது இந்து மதத்தின்  அடையாளம் என்பதால் பண்டைய கால வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும், என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தில் குறிப்பிட்ட இந்த விவகாரத்தை மூன்று மாதங்களுக்கு பிறகு எழுப்பும்படி குறிப்பிட்ட நீதிமன்றம், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.

Categories

Tech |