Categories
உலக செய்திகள்

இலங்கையில் வலுக்கும் போராட்டம்…..ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது…..!!!!!

இலங்கையில்  பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடன், விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை பல மணி நேரம் மின்சாரம் வினியோகம் போன்றவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வலுத்தாலும் அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் எதுவும் பலன் தரவில்லை.இந்த  நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந் நிலையில், நாட்டு மக்களுக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சே உரையாற்றியுள்ளார்.அப்போது அவர் கூறிய போது:  இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை மக்கள் கைவிட வேண்டும். மக்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகமாகிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. பலவீனமான பொருளாதாரத்தில் கொரோனா ஊரடங்கு அன்னிய செலவாணி இருப்பை குறைத்தது” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |