Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி…. சக்கரத்தில் சிக்கி பலியான சோகம்…. தென்காசியில் கோர விபத்து…!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு களஞ்சியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சுரண்டை நோக்கி சென்ற பேருந்தில் ஏற மூதாட்டி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கால் தவறி கீழே விழுந்துவிட்டார்.

இதனால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான ஜெயசீலன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |