Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டே நடந்த தொழிலாளி…. ரயிலில் அடிபட்டு இறந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலுள்ள புதுநகர் பகுதியிலிருக்கும் 5 தெருவில் 56 வயதான சீனிவாசன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் நேற்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டுள்ளர்.

இதனையடுத்து சீனிவாசன் தன்னுடன் கட்டிட வேலை செய்கின்ற மற்றொரு நபருடன் பேசியபடி ஆவடிலுள்ள ரயில் நிலையத்தின் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் மோதியதால் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆவடி ரயில்வே காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |