ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு மார்ச் 30-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் வரை உயர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி டிஏ குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி டி ஏ மற்றும் டி ஆர் காக ஒரு வருடத்திற்கு 9,544.50 கோடி செலவாகும்.
இதன் மூலமாக மத்திய அரசு ஊழியர்கள் 47.68 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இதனையடுத்து 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது ரயில்வே அமைச்சகம் திருத்தப்பட்ட கட்டணத்துடன் ரயில்வே ஊழியர்களுக்கு டிஏ வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் நடவடிக்கையினால் 14 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.