விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் முருகேசன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.