Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த இன்ஜினியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் காலனி தெருவில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முருகேசன் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முருகேசன் தனது அக்காளிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகேசன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசன் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை என முருகேசன் எழுதியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |