பன்னடுக்கு போக்குவரத்து நிறுத்தம் கட்டப்படும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார் .
சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ராயபுரம், என் சி சாலை குறுகலாக உள்ளதால் அதற்கு அருகே உள்ள ராபின்ஸ் பூங்கா அருகே அடுக்குமாடி பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் நாடு முழுவதுமே வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நகராட்சித் துறையின் இடம் ஏதும் இருப்பின் அங்கு அடுக்குமாடி பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று கூறினார். காஞ்சிபுரத்தில் இடத்தை பொருத்து வாகன நிறுத்தம் அமைக்கப்படும், சென்னையில் டிநகரில் அமைக்கப்பட்டது போல் இல்லாமல் இனி இரும்பு பீம் கொண்டு குறைந்த செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.