Categories
செய்திகள்

மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு தேவை? ….

மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு தேவையான நிதி குறித்து விவாதித்து மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு தேவையான நிதி குறித்து விவாதித்து மனு தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தை அழகு படுத்துவது தொடர்பாக நீதிபதி பிரபாகரன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்துள்ளது.

கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது பராமரிப்பு பணிக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்களை ஒப்படைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2018 -19 ஆண்டுகளிலுள்ள நுழைவு
கட்டணம்முறையே 8 கோடியே 14 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளதாக இந்திய தொல்லியல் தொல்லியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யுனெஸ்கோவால் புராதன சின்னம் என அறிவிக்கப்பட்ட மாமல்லபுரத்தை அழகுபடுத்த மத்திய அரசுதான் நிதி உதவி ஒதுக்கிட வேண்டும் என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருதரப்பினர்களின் விவாதங்களை கேட்டு நீதிபதிகள் மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு தேவைப்படும் நிதி குறித்து மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு பங்களிப்பு குறித்து தமிழக அரசின் சுற்றுலா துறை செயலாளர் மற்றும் நிதிச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் விவாதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |